தெலுங்கு சினிமாவில் 'ஆரண்யம்லோ', 'ஓ பில்லா நீ வல்லா' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், ஷாலு சௌராசியா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.14) இரவு 8.30 மணிக்கு கே.பி.ஆர்.பார்க்கில் வாக்கிங் சென்றிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை மிரட்டி பணம், நகை கொடுக்குமாறு மிரட்டினர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்க உடனே ஷாலுவின் முகத்தில் குத்திவிட்டு கல்லால் தாக்கியுள்ளனர். மேலும் அவரிடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.