உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டாவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடும் சேலஞ்சை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா எம்.பி. சந்தோஷ் குமார், நடிகர் நாகர்ஜுனா மற்றும் நடிகை சமந்தாவுக்கு மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த சவாலை ஏற்று அவர்கள் தங்களது தோட்டத்தில் 3 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.