கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான பலர் விபரீதமான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி நீண்ட நாள்களாக மதுவுக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டாஸ்மாக் மது பானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மன உளைச்சலில் இருந்த பூபதி திடீரென்று நேற்று இரவு, தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.