தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 8, 2020, 11:24 AM IST

Updated : Apr 8, 2020, 8:15 PM IST

ETV Bharat / sitara

'மது கிடைக்கவில்லை'- விரக்தியில் தற்கொலை முயற்சி செய்த மனோரமாவின் மகன்

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி, திடீரென்று தற்கொலை முயற்சி செய்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனோரமாவின் மகன்
மனோரமாவின் மகன்

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான பலர் விபரீதமான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி நீண்ட நாள்களாக மதுவுக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டாஸ்மாக் மது பானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மன உளைச்சலில் இருந்த பூபதி திடீரென்று நேற்று இரவு, தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாம்பலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நீங்கள் கொடுத்த ஊக்கத்தை என்னால் மறக்க முடியாது - உருகிய ஏ.ஆர் ரஹ்மான்

Last Updated : Apr 8, 2020, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details