தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2019, 6:49 PM IST

ETV Bharat / sitara

இமாச்சலப் பிரதேச நிலச்சரிவில் சிக்கிய தனுஷ் பட நாயகி

இமாச்சலப் பிரேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நடிகை மஞ்சு வாரியர் உட்பட படக்குழுவினர் சிக்கியுள்ளனர்.

Manju Warrier

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ’அசுரன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

மேலும், மஞ்சு வாரியர் மலையாளத்தில் இயக்குநர் சனல் குமார் சசிதரன் இயக்கத்தில் உருவாகிவரும் ’கைட்டம்’ திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இதற்காக சனல் குமார் சசிதரன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழு இமாச்சலப் பிரேதசத்தில் தங்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மஞ்சு வாரியரும் படக்குழுவும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலச்சரிவு காரணமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மஞ்சு வாரியர் சேட்டிலைட் தொலைபேசி மூலமாக தனது சகோதரர் மது வாரியாரை தொடர்புகொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மது கூறுகையில், மஞ்சு வாரியரும் படக்குழுவினரும் சட்ரு என்னும் கிராமத்தில் தங்கி உள்ளனர். அங்கு இணைய சேவையும் தொலைத் தொடர்பு வசதிகளும் முற்றிலுமாக செயலிழந்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பின் மது மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனிடம் தகவல் அளித்துள்ளார். அவர் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து படக்குழுவினரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details