தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2020, 11:55 AM IST

ETV Bharat / sitara

மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்த கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி அஜித் ரசிகர்களை சாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பு இழுத்த கஸ்தூரி
மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பு இழுத்த கஸ்தூரி

நடிகை கஸ்தூரி அரசியல், சமூகம் சார்ந்த விஷயங்கள் என்று துணிச்சலாக, தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். அவரது பதிவிற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் அவற்றைச் சளைக்காமல் சமாளித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் தன்னை பற்றி ஆபாசமாக பதிவு வெளியிடுகின்றனர் என்று அதனை ஸ்க்ரீன்ஷாட்டு எடுத்து, கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ''அஜித் சார் இன்னும் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க? உங்க ரசிகர்கள் இப்படி ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா? என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு பதிவில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை குறிப்பிட்டு, இதை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதில், ''சுரேஷ் சந்திரா சார் நீங்க, இந்த விஷயத்தை கண்டும் காணாத மாதிரி இருப்பது என்றும், அவளால என்ன பண்ண முடியும், கதறுவதை தவிர என்ற திமிர் எங்கே இருந்து வந்தது. உங்கள் மெளனத்தில் இருந்து வந்தது.

மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்த கஸ்தூரி.

தமிழ்நாடு காவல்துறை, இந்த ஸ்க்ரீன் ஷாட் பதிவுகளை புகாராக அளிக்கிறேன். நீங்களாவது நடவடிக்கை எடுங்க'' என்று அதில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களை கஸ்தூரி ட்விட்டரில் சாடியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்த கஸ்தூரி.

இதையும் படிங்க:பெரியார்-ரஜினி விவகாரம்: ஆளுக்கொரு விதமா பேசினா எதை எடுத்துக்கிறது? அதிமுக அமைச்சர்களைச் சாடிய கஸ்தூரி

ABOUT THE AUTHOR

...view details