தமிழ்நாடு

tamil nadu

ஒரு மாதத்துக்கு மின்கட்டணம் ஒரு லட்சம் ரூபாயா? - கலங்கிப்போன கார்த்திகா

ஊடரங்கு நேரத்தில் தனக்கு ஒரு லட்ச ரூபாய்வரை மின் கட்டண ரசீது வந்துள்ளதாக 'கோ' பட நாயகி அவரது ட்விட்டர் வாயிலாக புகார் ஒன்றை எழுப்பியுள்ளார்.

By

Published : Jun 26, 2020, 9:29 AM IST

Published : Jun 26, 2020, 9:29 AM IST

Actress Karthika complain against high Electricity bill
Actress Karthika complain against high Electricity bill

கரோனா தொற்று காரணமாக பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகமாகிவருகிறது; இதற்குத் திரை பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகப் பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

நடிகை கார்த்திகா

'கோ' பட நடிகையான கார்த்திகா தனக்கு அதிகமாக மின்கட்டண ரசீது வந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டரில், "என்ன மாதிரியான ஊழலை அதானி மின்சார நிறுவனம் மும்பையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது? என்னுடைய ஜூன் மாத மின்சாரக் கட்டணம் ஒரு லட்ச ரூபாய் வரை உள்ளது.

(ஊரடங்கு காலத்தில் அவர்களால் மீட்டர் கணக்கை மதிப்பிட முடியாததால் அவர்களே மதிப்பிட்டுக் கொள்கிறார்கள்) மும்பைவாசிகள் பலரிடமிருந்தும் இதே மாதிரியான புகார்கள் எழுகின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்குப் பலரும் தங்களது ஆதரவு குரலை எழுப்பிவருகின்றனர்.

இதையும் படிங்க... தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளை அடிக்கிறது - நடிகர் பிரசன்னா

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details