தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2022, 6:40 PM IST

ETV Bharat / sitara

ரிலீசுக்குத் தயாராகும் எதற்கும் துணிந்தவன்!

சூர்யாவின் அடுத்த திரைப்படமான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனையடுத்து அத்திரைப்படம் ரிலீசுக்குத் தயாராகியுள்ளது.

ரிலீசுக்கு தயாராகும் எதற்கும் துணிந்தவன்..!
ரிலீசுக்கு தயாராகும் எதற்கும் துணிந்தவன்..!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தான் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இதில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்தில் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது படத்தின் அடுத்தகட்ட ப்ரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தணிக்கைத்துறை இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்தோடு இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:’அப்பா மட்டும் போதும்...’ - சொல்லாமல் சொல்லும் ரஜினி மகள்?

ABOUT THE AUTHOR

...view details