தமிழ்நாடு

tamil nadu

'ஊரே அடங்கி நிக்கும், எங்க கருப்பன் நடந்து போனா' - சூரி!

நடிகர் சூரி தனது கருப்பன் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

By

Published : Jul 6, 2020, 8:47 PM IST

Published : Jul 6, 2020, 8:47 PM IST

சூரி
சூரி

கோவிட்-19 காரணமாக திரைப் பிரபலங்கள் பலரும் தாங்கள் வீட்டில் செய்யும் வேலை குறித்து அவ்வப்போது பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் இணைந்து, கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் தற்போது வளர்த்துவரும் கருப்பன் என்ற காளை மாட்டை வெளியே கொண்டு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், " ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!" என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details