தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2021, 9:40 PM IST

ETV Bharat / sitara

கரோனா தடுப்பு நிவாரண நிதி: ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அப்படி அளிக்கப்படும் நன்கொடைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், தடுப்பூசிகள், பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த வேண்டுகோளையடுத்து திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டப் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details