சென்னை: செக்யூரிட்டி வேலையிலிருந்து பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரியவிருக்கும் நபரை அறிமுகப்படுத்தி, அவர் தனக்கு உத்வேகம் அளிப்பதாக நகைச்சுவை நடிகர் சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா பீதியால் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு எங்கும் செல்லாமல் இருந்தவரும் நிலையில், நகைச்சுவை நடிகர் சதீஷ் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்விதமாக காணொலி ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில் தோன்றும் சதீஷ், "நமது வாழ்க்கையில் எங்கிருந்து வேண்டுமானலும் நமக்கு உத்வேகம் கிடைக்கலாம். அந்த வகையில் நமக்கு உத்வேகம் அளிக்கும் பாலு சாமி என்கிற நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிய இவர் மிகவும் தன்மையாகப் பேசி பழகுவார். அடுத்த மாதத்திருந்து வேலைக்கு வரமாட்டேன் எனவும், வேலம்மாள் பள்ளியில் பணியாற்றவிருப்பதாகவும் தெரிவித்தார்.