பிரபல குணச்சித்திர நடிகர் பாலாசிங் (67) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமைனையில் இன்று அதிகாலை காலமானார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்றைய தினமே உடல்நிலை மிக மோசமானதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
நடிகர் பாலாசிங் தமிழில், நடிகர் நாசர் இயக்கி நடித்த 'அவதாரம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். கன்னியாகுமரியைச் சேர்ந்த இவர் 1983ஆம் ஆண்டு வெளியான 'மலமுகளிளே தெய்வம்' என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும், தமிழில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.