தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எனக்கும் அந்த ஆசை அதிகமாகவே இருந்தது - நடிகர் அதர்வா ஓபன் டாக்!

சென்னை: பிற நடிகர்களைப்போன்று தனக்குள் இருந்த ஆசை பற்றி நடிகர் அதர்வா வெளிப்படையாக பேசியுள்ளார்.

By

Published : May 1, 2019, 10:03 AM IST

atharva

நடிகர் அதர்வா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் ‘100’. சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா, யோகி பாபு, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு நடக்கும் கொடூரங்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நடிகர் அதர்வா, இயக்குநர் சாம் ஆண்டன், இசையமைப்பாளர் சாம் டி எஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் அதர்வா, “பொதுவா நமக்கு ஒரு பிரச்னை வரும்போது 100க்கு தான் ஃபோன் செய்வோம். அங்கு ஃபோன் எடுத்து பேசுபவர்கள் ஆண்டவனுக்கு சமம். அவர்கள்தான் என்ன பிரச்னை என்று நம்மிடம் கேட்டு அதை ஒருங்கிணைத்து நாம் என்ன செய்யவேண்டும் என ஆறுதல் கூறுவார்கள்.

இந்த படம் கன்ட்ரோல் ரூமில் பணிபுரியும் ஆபீஸர் பற்றிய ஒரு படம். கண்டிப்பாக இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு போலீஸ் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு அந்த ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

இதுபோன்ற ஒரு படத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நகைச்சுவை படங்களை எடுத்த இயக்குநர் சாம் ஆண்டன் இதுபோன்று அதிகமான ஆக்சன் படங்களை எடுக்க வேண்டும்.

100 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளார்கள். ஒரு படத்தை சரியான தேதியில் ரிலீஸ் செய்வது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது நமக்குத் தெரியும். அந்த வகையில் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படம் நல்ல பொழுதுபோக்காக அமையும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details