தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவுவோம்’- அபி சரவணன்

எனது வீட்டில் எனக்கு உணவு கிடைப்பது போல அனைவரும் உணவு அருந்துவார்களா? என்ற கவலை உள்ளது. எல்லோருக்கும் உதவிட என்னால் முடியாது, எனினும் மதுரையில் நான் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு, என்னாலான சிறிய உதவியைச் செய்யலாம் என முடிவெடுத்தேன் என்று உணவு பொருட்கள் வழங்கிய அபி சரவணன் தெரிவித்துள்ளார்.

’இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவுவோம்’- அபி சரவணன்
’இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவுவோம்’- அபி சரவணன்

By

Published : Apr 10, 2020, 8:03 PM IST

சென்னை: கரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நடிகர் அபி சரவணன் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸால் உண்ண உணவின்றி தவிக்கும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சில குடும்பங்களுக்கு நடிகர் அபி சரவணன், அரிசி, பலசரக்கு, காய்கறிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

இது குறித்து நடிகர் அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “கரோனாவின் கோரப்பிடியில் ஒட்டுமொத்த உலகமும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியம். இருந்தாலும் எனது வீட்டில் எனக்கு உணவு கிடைப்பது போல அனைவரும் உணவு அருந்துவார்களா? என்ற கவலை உள்ளது.

’இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவுவோம்’- அபி சரவணன்

எல்லோருக்கும் உதவிட என்னால் முடியாது, எனினும் மதுரையில் நான் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு என்னாலான சிறிய உதவியைச் செய்யலாம் என முடிவெடுத்தேன். எனது பள்ளி நண்பன் கார்த்திக் & கருப்பு, சதமாபி சக்தி தேர்வு செய்த குடும்பங்களுக்கு, 'காருண்யா 5டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனர் ஜெசியுடன் இணைந்து, சிறிய உதவியாக அரிசி, பலசரக்கு, காய்கறிகள் வழங்கப்பட்டன.

கரோனாவின் கொடூரப் பிடியில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சேவையில் ஈடுபட்டுவரும் அனைத்து மருத்துவத்துறை, சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளாட்சித்துறை, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் தேவையான மன வலிமையையும் உடல் வலிமையையும் தர இறைவனை வேண்டுகிறேன். இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவுவோம், பாதுகாப்புடன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வீட்டிலேயே இருங்கள்: இரு கரங்கள் கூப்பி எம்.எஸ். பாஸ்கர் வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details