தமிழ்த்திரைப்படங்களின் வழக்கமான போக்கை மாற்றி, எளிமையான வாழ்வியலில், அன்றாடம் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைக் கண் முன்னேக் கொண்டு வர செய்தவர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர் ஒருவர் உள்ளார். அவர் வேரு யாருமில்லை. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்கள் மூலம் வெற்றிப்பட இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வருகிற இயக்குநர் மாரி செல்வராஜ் தான்.
தனது திரைக்கதைகளின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ள இந்த இயக்குநர், தற்போது 'மாமன்னன்' என்ற புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் அந்தத் திரைப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அதன் படப்பிடிப்பு வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.