தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மும்பை காவல் துறையின் சம்மனை தவிர்த்த கங்கனா - மும்மை காவல்துறையினர் சம்மன்

மும்பை: மத ஒற்றுமையை சீர்குலைத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரிக்கு மும்பை காவல் துறையினர் அனுப்பிய சம்மனை தவிர்த்துள்ளனர்.

kangana
kangana

By

Published : Nov 10, 2020, 12:26 PM IST

கடந்த சில மாதங்களாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பல்வேறு பிரச்னைகளில் சிக்கி வருகிறார். இவரின் சர்ச்சை கருத்துகளுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா, அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவுசெய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்த்ரா மாஜிஸ்திரேட் மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கங்கனா, அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்காக நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி இருவரும் வரும் நவம்பர் 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை காவல் துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனுக்கு இருவரும் இன்று நேரில் ஆஜராகவில்லை. அதுமட்டுமல்லாது இந்த சம்மனை அவர் தவிர்த்தார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, அக்டோபர் 26, 27ஆம் தேதிகளில் மும்பை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அப்போது சகோதரரின் திருமண ஏற்பாடுகள் காரணமாக வர முடியவில்லை என கங்கனா விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details