தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்திக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கிறேன்? கங்கனா ரணாவத் விளக்கம் - கபடி வீரங்கனையாக கங்கனா

இந்தி மொழியில் கிடைக்கும் சுவை பீட்சா, பர்கரில் கிடைக்கபோவதில்லை. ’மாம்’ என்ற சொல்லைவிட ’மா’ என்ற சொல்லில் அன்பு இருப்பதாகக் கூறியிருக்கும் கங்கனா ரணாவத், இந்தி மொழியை அனைவரும் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Kangana ranaut voice for hindi language
Actress Kangana Ranaut

By

Published : Jan 11, 2020, 3:44 PM IST

மும்பை: எனது ஆங்கில புலமையை பாலிவுட் திரையுலகினர் கேலி செய்கின்றனர். அதன் காரணமாக நான் இந்தி பேசுவதில் முன்னுரிமை அளிக்கிறேன் என்று பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

கங்கனாவின் தங்கை ரங்கோலி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவில் பேசியிருக்கும் கங்கனா, இந்தி திரையுலகினர் எனது ஆங்கில புலமையை கேலி செய்கின்றனர். பலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். ஆனாலும் ரசிகர்களிடையே என்னை கொண்டு சேர்த்து எனது வெற்றிக்கு காரணமாக இருக்கும் இந்தி மொழிக்கே முன்னுரிமை அளிக்கிறேன்.

இந்தி நமது தேசிய மொழி. ஆனால் நாட்டு மக்கள் அதை பேசுவதற்கு கவலைப்படுகின்றனர். 'ஏ' 'பி' 'சி' என்ற ஆங்கில எழுத்துகள் சொல்வதில் வரும் தன்னம்பிக்கை 'க', 'கா' என்று சொல்வதில் வருவதில்லை. ஒவ்வொரு பொற்றோரும் தங்களது பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசுவது கண்டு பெருமைகொள்கின்றனர்.

ஆங்கிலத்தில் பலவீனமாக இருந்தால் வெட்கப்படுபவர்கள், இந்தியில் புலமை பெறாமல் இருப்பது பற்றி கொஞ்சம்கூட கவலையில்லாமல் இருக்கின்றனர்.

எல்லா தாய்மார்களும் தங்களது பிள்ளைகளுக்கு இந்தி கற்றுத்தர வேண்டும். இந்தி மொழியில் கிடைக்கும் சுவை பீட்சா, பர்கரில் கிடைக்கபோவதில்லை. 'மா' என்ற வார்த்தையில் இருக்கும் அன்பு, 'மாம்' என்ற வார்த்தையில் இருக்கப்போவதில்லை.

இவ்வாறு அவர் இந்தியில் கூறியுள்ளார்.

அஸ்வின் ஐயர் திவாரி இயக்கத்தில் கபடி வீராங்கனையாக கங்கனா நடித்திருக்கும் புதிய படம் 'பங்கா'. வரும் 24ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதை எதிர்நோக்கி காத்திருக்கும் கங்கனா, தற்போது இந்தி மொழிக்காக குரல் கொடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details