தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2019, 11:16 AM IST

ETV Bharat / sitara

'படத்தின் முதல் நாள் வசூலை விட போராட்டம் முக்கியமானவை'- சோனாக்ஷி சின்ஹா

படத்தின் முதல் நாள் வசூலை விட குடியுரிமை சட்டம் குறித்தான போராட்டம் முக்கியமானவை என நடிகை சோனாக்ஷி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

CAA protests are more important than films first day collection says Sonakshi Sinha
CAA protests are more important than films first day collection says Sonakshi Sinha

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதங்களும் போராட்டங்களும் ஒருபுறம் இருக்க, அதற்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில், திரைப்படங்களும் இதே நேரத்தில் வெளியிடப்பட்டன. குறிப்பாக பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான சல்மான் கானின் தபாங்- 3 திரைப்படமும் வெளியானது. இது குறித்து படத்தின் நடிகையான சோனாக்ஷி சின்ஷா குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது நிலைபாட்டை பகிர்ந்துகொண்டார்.

'மக்களுக்கு எது மிக முக்கியமானது என தெரியும் என்று நினைக்கிறேன். படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்நேரத்தில் ஒட்டுமொத்த நாடும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்துள்ளது. இது படத்தை விட முக்கியமானது. ' என்றார்.

'தபாங்- 3' திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 24.5 கோடி ஈட்டியது.

இதையும் படிங்க: ‘சனா சுதந்திரமாக கருத்து தெரிவிக்க கங்குலி அனுமதிக்க வேண்டும்’ - நடிகை நக்மா

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details