தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 1, 2021, 4:17 PM IST

Updated : Mar 1, 2021, 5:25 PM IST

ETV Bharat / sitara

நீதிமன்றத்தில் ஆஜராகாத கங்கனா ரனாவத்துக்குப் பிடியாணை!

மும்பை: அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய கங்கனா ரனாவத்துக்கு, மும்பை நீதிமன்றம் பிணையில் வரக்கூடிய பிடியாணை பிறப்பித்துள்ளது.

Kangana
கங்கணா

நடிகை கங்கனா ரனாவத், தவறான தகவல்களைப் பரப்பி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் புகார் அளித்திருந்தார்.

இவ்வழக்குத் தொடர்பான விசாரணைக்காக மார்ச் 1ஆம் தேதி அந்தேரி பெருநகர நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கங்கனா ரனாவத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதைத் தொடர்ந்து, அவருக்குப் பிணையில் வரக்கூடிய பிடியாணை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா!

Last Updated : Mar 1, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details