தமிழ்நாடு

tamil nadu

அஸ்ஸாம், பிகார் மாநிலங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் 'விருஷ்கா'

By

Published : Jul 30, 2020, 5:15 PM IST

மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அவரது கணவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம், பிகார் மாநிலங்களுக்கு நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

விருஷ்கா
விருஷ்கா

பிகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலங்கள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.
பிகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 38 லட்சத்து 47 ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அஸ்ஸாமில் ஐந்து ஆயிரத்து 305 கிராமங்களிலிருந்து மொத்தம் 56 லட்சத்து 71 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து நடிகை அனுஷ்கா சர்மா அவரது கணவர் கேப்டன் விராட் கோலியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாநிலங்களுக்கு நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இதுகுறித்து அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில், “பிகார், அஸ்ஸாம் மாநிலங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு நாங்கள் நன்கொடை அளிக்கிறோம். இதில் மக்களும் பங்களிக்க வேண்டும். நம் நாடு கரோனா தொற்று நோய்க்கு மத்தியில் இருக்கும் போது அஸ்ஸாம் மற்றும் பிகார் மக்கள் பலர் தங்களது உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதித்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். விராட் மற்றும் நான் அம்மாநில மக்களுக்கு நிவாரண நிதி அளித்து ஆதரவு அளிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details