தமிழ்நாடு

tamil nadu

'எங்களை வெறுப்பவர்களுக்கு எல்லா அன்பும்!'

By

Published : Mar 6, 2021, 10:28 PM IST

மும்பை: இரண்டாவது முறையாக நடிகை டாப்ஸி பன்னு-இயக்குநர் அனுராக் காஷ்யப் கூட்டணியில் உருவாகும் 'டோபாரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Anurag Kashyap
Anurag Kashyap

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸியை வைத்து தற்போது 'டோபாரா' (DoBaaraa) என்னும் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை ஷோபா கபூர் தயாரிக்கிறார். 'மன்மர்ஜியான்' படத்தைத் தொடர்ந்து டாப்ஸி பன்னு இரண்டாவது முறையாக அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடித்துவருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று (மார்ச் 6) தொடங்கியதாக அனுராக் காஷ்யப் தனது சமூக வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார்.

அதில், "நாங்கள் டோபாராவைத் தொடங்குகிறோம். வெறுப்பவர்களுக்கு எங்கள் எல்லா அன்பும்" எனப் பதிவிட்டு படப்பிடிப்பில் டாப்ஸியின் மடியில் அனுராக் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டார்.

கடந்த சில நாள்களாக டாப்ஸி, அனுராக் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதில் பல கோடி மதிப்பிலான ஆதாரங்களைக் கைப்பற்றப்பட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details