தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2019, 4:27 PM IST

ETV Bharat / sitara

புயல் பாதிப்புக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ. 1கோடி நிதி

ஒடிசா : ஃபானி புயல் பாதிப்புக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

நடிகர் அக்ஷய் குமார்

கடந்த வாரம் ஃபானி புயல் கோரதாண்டவமாடியதில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் பலத்த சேதம் அடைந்தன. புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உதவி கரம் நீட்டி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன் கேரளா வெள்ளப்பெருக்கு மற்றும் சென்னை வெள்ளப்பாதிப்பின் போது அக்ஷய் குமார் நன்கொடை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details