தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 10:20 PM IST

ETV Bharat / sitara

ஐஸ்வர்யா ராய் மகன் நான்! உரிமை கோரும் 32 வயது இளைஞர்

பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் செயற்கை கருத்தரித்தில் மூலம் தன்னை பெற்றெடுத்தார் என்று கூறியிருக்கும் இளைஞர், அவர் தனது தாய் என உரிமை கோரியுள்ளார்.

Youth claims Aishwarya rai to be his mother
Actress Aishwarya rai

மும்பை: செயற்கை கருத்தரித்தல் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு, 1988ஆம் ஆண்டு லண்டனில் பிறந்துள்ளேன் என்று சங்கீத் குமார் என்ற இளைஞர் தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சங்கீத் குமார் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. இதில், பேசியிருக்கும் அவர், ஐஸ்வர்யா ராய் எனது தாய் எனவும், அவரது தாயார் பிருந்தா ராய், மறைந்த தந்தை கிருஷ்ணராஜ் ராய் ஆகியோர் தன்னை இரண்டு வயது வரை பார்த்துக்கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எனது பிறப்பு குறித்த ஆதாரங்களை உறவினர்கள் அழித்துவிட்டனர். தற்போது தாய் ஐஸ்வர்யா ராயுடன் மீண்டும் இணைந்து வாழ காத்திருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று சங்கீத் குமார் வீடியோவில் கூறியிருப்பது, அவரது பேச்சு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

வெனிஸ் கெயில் லார்ட் கல்கி என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் இயங்கி வரும் சங்கீத் குமார், ஹாலிவுட் டாப் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு எழுதிய கதையையும் தனது பக்கத்தில் பகிந்திருக்கிறார்.

Sangeeth Kumar script for Steven Spielberg

இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் பெரும் விவாதமே நடத்தி வரும் வேளையில், இதுபற்றி ஐஸ்வர்யா ராய் இதுவரை வாய் ஏதும் திறக்கவில்லை.

மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பில் தற்போது அவர் பிஸியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் பிரபல பாடகி அனுராதா பட்வால் மகள் என்று கூறி கேரளாவைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தமிழ்நாட்டிலும் நடிகர் தனுஷை தனது மகன் என்று உரிமை கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details