தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

'இனி சைலன்டாக வெளியேறலாம்' - வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட்! - new update

இனி வாட்ஸ்-அப் செயலியானது குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் வெளியேறும் வகையில் புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது.

இனி சைலண்டாக வெளியேரலாம் வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட்
இனி சைலண்டாக வெளியேரலாம் வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட்

By

Published : May 20, 2022, 9:32 PM IST

உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகப்பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்-அப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை கொடுப்பது வழக்கம். அதேபோல் இந்த மாதம் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு, iOS மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள வாட்ஸ்-அப்பின் சமீபத்திய பதிப்பானது, பயனர்கள் தனித்தனி செய்திகளுக்கு எமோஜியுடன் பதிலளிக்கவும், அதே நேரத்தில் 512 நபர்களை குழுக்களில் சேர்க்கும் வகையில் உள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு அதிரடி அப்டேட்டை அறிவித்துள்ளது. அதன்படி, குழுக்களில் சேரும் நபர்கள், குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் குழுவின் அட்மினுக்கு மட்டும் தெரிந்தபடி அமைதியாக வெளியேறக்கூடிய வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:மலிவு விலையில் புதிய ஆப்பிள் டிவி - ஆப்பிள் நிறுவனம் திட்டம்?

ABOUT THE AUTHOR

...view details