இதுகுறித்து அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறுகையில், "ஸ்டார்லிங்க் திட்டத்தின் கீழ், உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் நேற்றிரவு (ஆக.30) விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில நாள்களாக ஏற்பட்டுவரும் மோசமான வானிலை காரணமாக, அப்பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதனால் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி காலை 9:29 மணிக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் திட்டமிட்டப்படி விண்ணில் ஏவப்படும்" எனத் தெரிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகும். அதன் ஸ்டார்லிங்க் திட்டம் என்பது அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் வலையமைப்பாகும்.