இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதபடுபவர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், என்ற எம்.எஸ். சுவாமிநாதன். 1925ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணம் மாவட்டத்தில் பிறந்த சுவாமிநாதன், தனது சொந்த ஊரில் கல்வியை முடித்து விட்டு மருத்துவராக விருப்பம் கொண்டிருந்தார்.
ஆனால், 1943ஆம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரின் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. சுமார் 30 லட்சம் மக்கள் பசியின் கோரப்பிடியால் உயிரிழந்ததைப் பார்த்த அவர், வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என தனது பாதையை திருப்பிக் கொண்டார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜ கல்லூரியில் விலங்கியல் பட்டப்படிப்பு முடித்த இவர், மதராஸ் வேளாண் கல்லூரியில் வேளாண் அறிவியல் படிப்பையும் முடித்தார்.