கரோனா வைரஸ், சுகாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கல்வி முதல் பல்வேறு விவகாரங்கள் வரையிலான பிரச்னைகள் குறித்து, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் பார்த்ததைவிட அமெரிக்காவை மிகவும் மாறுபட்டப் பாதையில் கொண்டு செல்வதாக ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியிலிருந்து அதிபர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர், பாரிஸ் பருவநிலை ஒபந்தத்தினை திரும்பப் பெறுதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துதல் போன்ற விவகாரங்களில் ட்ரம்ப்பின் கொள்கை போல் அல்லாமல் முன்னிருந்ததுபோல் மாற்றியமைப்பதாக உறுதியளிக்கிறார்.
கட்டுபடியாகக்கூடிய பராமரிப்புச் சட்டத்தை ட்ரம்ப் தள்ளுபடி செய்ய விரும்பினால், அதிக அமெரிக்கர்களை உள்ளடக்குவதற்கு ஒரு பொது விருப்பத்தினை இணைத்து “ஒபாமா கேர்“ விரிவாக்கத்தினை முன்மொழிகிறார்.
பைடனின் அதிபர் காலம் எப்படியாக இருக்கும் என்பதைபற்றி நாங்கள் அறிந்தவை பின்வருமாறுꓽ
பொருளாதாரம், வரிகள் மற்றும் கடன்ꓽ
ஜனவரி 14 ஆம் தேதி, அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும், கரோனா வைரஸை எதிர்த்துப் போராடவும் 1.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தினை அறிவித்தார். ஒரு இணையானப் பாதையில், இந்த அறிவிப்பு பொருளாதாரத்தை உறுதிப்படுத்த மற்றுமொரு உதவிச் சுற்றினை வழங்குவதாக இருக்கிறது. அதே சமயத்தில், பொது சுகாதாரத்திற்கான முயற்சி தொற்றுநோயைக் காட்டிலும் மேலோங்க முயலுகிறது.
“அமெரிக்க மீட்புத் திட்டம்“ என்று அழைக்கப்படும் திட்டமானது, தொற்று நோயைத் தடுத்து நிறுத்துவதையும், தடுப்பூசித் தயாரிப்பினை விரைவு படுத்துவதையும், நீண்டகால பொருளாதார வீழ்ச்சியுடன் போராடும் தனி நபர்கள், மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அரசுகள், மேலும் வணிகங்கள் போன்றவற்றிற்கு நிதி உதவியினை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோவிட்- 19 ஐ கட்டுப்படுத்தும் வரை பொருளாதாரத்தினை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்று வாதாடுகிறார்.
முன்னாள் துணை அதிபர், நீண்டகால மீட்புக்காக ஒரு நீட்டிக்கப்பட்ட மந்தமான நிலையினைத் தவிர்ப்பதற்கும், வெள்ளையர்களல்லாத அமெரிக்கர்களை விகிதாசாரமாகப் பாதிக்கும் நீண்டகால செல்வ சமத்துமின்மையினை நிவர்த்தி செய்வதற்கும் பரவலான கூட்டாட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் தனது பெரிய செலவுகளின் கீழுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களுக்கான செலவுகளுக்கானத் தொகையின் பெரும்பகுதியை 2017 ஜிஓபி வரி மாற்றத்தின் மூலம் திரும்பப் பெறுவார். அவர் விரும்புகின்ற பெருநிறுவன வருமான வரி 28 விழுக்காடு என்பது முன்பு இருந்ததைவிடக் குறைவானதாகவும் இப்போது இருப்பதைவிட அதிகமாகவும் உள்ளது. மேலும் வருடாந்திர வரி மற்றும் ஊதிய வரி விதிப்பானது 400,000 டாலருக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு மட்டும் உயர்த்தப்படுவதாய் இருக்கிறது. இவை அனைத்தும் 10 ஆண்டுகளில் 4 ட்ரில்லியன் டாலர் அல்லது அதற்கும் மேலே வருவாயைப் பெருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைடன் குடியேற்றத்தை ஒரு பொருளாதார விவிகாரமாக வடிவமைக்கிறார். சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான இடங்களை விரிவாக்கவும், சட்டவிரோதமாக, ஆனால் ஏற்கனவே தொழிலாளர்களாகவும், நுகர்வோர்களாகவும் பொருளாதரத்திற்குப் பங்களிக்கிறவர்களாகவும், நாட்டில் உள்ள சுமார் 11 மில்லியன் மக்களுக்குக் குடியுரிமைப் பாதையினை வழங்கவும் அவர் விரும்புகிறார்.
பைடனின் பரப்புரை திட்டங்கள் தேசியக் கடனை 10 ஆண்டுகளில் சுமார் 5.6 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிகப்படுத்தும் என்று ஒரு பொறுப்பான கூட்டாட்சி பட்ஜெட்டுக்கான குழுவின் பகுப்பாய்வு மதிப்பிடுகிறது.
தேசியக் கடனானது தற்போது 20 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாகவே உள்ளது.
கரோனா வரைஸின் சர்வதேசப் பரவல்
அதிபர் மற்றும் கூட்டாட்சி அரசு சர்வதேச பரவலான நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கவே உள்ளது என்று பைடன் ட்ரம்புடன் வாதிடும்போது தனது கூர்மையான முரண்பாடுகளை வரைகிறார். அவர் ட்ரம்பைப் போலல்லாமல், வைரஸை எதிர்த்துப் போராடும் போராட்டம் மாநில ஆளுநர்கள் மட்டுமே உரியது என்பதை நம்பாமல், கூட்டாட்சி அரசாங்கத்தின் ஆதரவும் இருக்கவேண்டும் என்கிறார்.
வணிக மற்றும் தனிநபர்கள், மாநிலம் மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் போன்றவற்றுடன் சேர்ந்து, தொற்றுநோய்களினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைத் தேக்கங்களை சமாளிக்க பைடன் தாராளமான கூட்டாட்சி செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறார். பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை தீவிரமாகப் பயன்படுத்தப்போவதாக அவர் உறுதியளித்தார். முக்கியமான பொருட்களை நேரடியாக உற்பத்தி செய்ய அதிபர் பயன்படுத்தக்கூடிய போர்க்கால சட்டத்தினையும் உபயோகப்படுத்தப்போவதாக உறுதியளித்துள்ளார். ட்ரம்ப் அந்தச் சட்டத்தை செயற்கை சுவாசத்திற்கு உதவும் கருவி போன்றவைகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தியுள்ளார்.
ஒரு நிலையான செய்தியைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக அரசாங்கத்தின் விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் உயர்த்துவதாகவும், மீண்டும் அமெரிக்காவை உலக சுகாதார நிறுவனத்தில் இணைக்கவும் பைடன் உறுதியளிக்கிறார்.
தான் பதவி ஏற்பதற்கு முன்னதாக உள்ள காலத்தைப் பயன்படுத்தி நாடு தழுவிய முகமூடி ஆணை என்னவாக இருக்கும் என்பதைக் கேட்டறிய ஒவ்வொரு ஆளுநருடனும் கூட்டங்களை கூட்டுவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஏனெனில் கூட்டாட்சி அரசுக்கு அந்த அதிகாரம் இல்லாததால் அவ்வாறு செய்வதாக உறுதியளித்துள்ளார். இதுபோன்ற அனைத்து உத்தரவுகளையும் அமல்படுத்துவது கேள்விக்குரியதாக இருந்தாலும், அதற்கான விதிகளை மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து பெறுவதற்காக இப்படிப்பட்ட கூட்டங்களைக் கூட்டுவதாக பைடன் கூறுகிறார்.
சுகாதாரப் பாதுகாப்பு
“ஓபாமா கேர்“ என்று அழைக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம் ஓபாமா நிர்வாகத்தின் ஓர் பிரத்தியேக அடையாளமாக இருந்தது. அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க அதனை மேலும் மேம்படுத்த பைடன் விரும்புகிறார்.
பெரும்பாலான மக்கள் ஏற்கனவே பயன்படுத்தும் பிரிமீயம் மானியங்களை அதிகரிக்கும் அதே வேளையில், உழைக்கும் வயதுள்ள அமெரிக்கர்களுக்கான தனியார் காப்பீட்டு சந்தைகளுடன் போட்டியிட அவர் ஒரு “மெடிகேர் போன்ற பொது விருப்பத்தை“ உருவாக்குவார். நடுத்தரவர்க்கக் குடும்பங்களுக்கு மானிய விலையில் சுகாதாரக் காப்பீடு பெறச் செய்வார்.
தனது திட்டத்திற்கு 10 ஆண்டுகளில் சுமார் 750 பில்லியன் டாலர் செலவாகும் என்று பைடன் மதிப்பிடுகிறார். இது 2010 சுகாதாரச் சட்டத்தினை அகற்ற விரும்பும் ட்ரம்பிற்கும், தனியார் காப்பீட்டை முழுவதுமாக மாற்றுவதற்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் முறையை விரும்பும் முற்போக்குவாதிகளுக்கும் இடையில் பைடனை நிலைநிறுத்துகிறது. பைடன் தனது அணுகுமுறையை உலகளாவிய பாதுகாப்புக்கான அடுத்த கட்டமாகவும், காங்கிரஸின் மூலம் பெற்கூடிய ஒரு வழியாகவும் பார்க்கிறார்.
அதிபராக, பைடன் அந்த முடிவின் வீழ்ச்சியினை சமாளிக்க வேண்டியிருக்கும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பொறுத்த வரையில், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் தனியார் செலுத்தும் விலைகளை மெடிகேர் பேச்சுவார்த்தை நடத்தி நிர்ணயம் செய்ய ஏதுவாக்கும் சட்டங்களை பைடன் ஆதரிக்கிறார். மெடிகேர் மற்றும் பிற கூட்டாட்சித் திட்டங்களின் கீழ் உள்ளடக்கமான மக்கள் வாங்கும் மருந்துகளின் விலையை பணவீக்கத்தைவிட வேகமாக உயர்த்தும் மருந்து நிறுவனங்களைத் தடைசெய்வார். மற்ற நாடுகள் செலுத்தும் விலையினை அளவுகோலாகப் பயன்படுத்தி, கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் “சிறப்பு மருந்துகளுக்கான“ ஆரம்ப விலைகளையும் அவர் கட்டுப்படுத்துவார்.
பைடன், மெடிகேரில் பதிவு செய்தவர்களுக்கான வருடாந்திர மருந்து செலவுகளுக்கென்று ஒரு வரம்பை வைப்பார். இது ட்ரம்ப் முயற்சி செய்ததொன்று ஆகும். ஆனால், அதை காங்கிரஸின் மூலம் பெற முடியவில்லை. ட்ரம்பைப் போலவே, பைடனும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதிப்பார்.
குடிவரவு
குடியேற்றம் குறித்த ட்ரம்பின் செயல்பாடுகள் அமெரிக்காவின் மதிப்புகள் மீதான “இடைவிடாத தாக்குதல்“ என்று பைடன் அழைத்தார். மேலும் எல்லை அமலாக்த்தைத் தொடர்ந்து பராமரிக்கும்போது “சேதத்தை நீக்குவேன்“ என்றும் கூறுகிறார்.
மேலும், சிறுவயதினர் வருகைக்கான ஒத்திவைக்கப்பட்ட நடவடிக்கை அல்லது DACAஐ உடனடியாக மீண்டும் நிறுவுவேன் என்று பைடன் கூறுகிறார். இது சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட குழந்தைகளைச் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களாக இருக்க அனுமதித்தது. மேலும் ட்ரம்ப் விதித்த புகலிடம் மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் “பொதுக் கட்டண விதி“ யை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இது மருத்துவ உதவி, உணவு முத்திரைகள் அல்லது வீட்டு வவுச்சர்கள் போன்ற பொதுச் சேவைகளை பயன்படுத்தும் மக்களுக்கு விசாக்கள் அல்லது வதிவிடத்தை மறுக்கும். ட்ரம்ப் கொள்கைகளை திரும்பப் பெறுவதற்கான வழிகளை அவரது நிர்வாகம் ஆய்வு செய்யும் போது பைடன் அனைத்து நாடு கடத்தல்களுக்கும் 100 நாள் முடக்கத்தினை ஆதரிப்பார். சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு வந்து, குற்றங்களுக்குத் தண்டனை பெற்றவர்கள் அல்லது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்திய புலம்பெயர்ந்தோரை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும் ஒபாமா காலக் கொள்கையினை பைடன் இறுதியில் மீட்டெடுப்பார். இது சட்ட விரோதமாக நாட்டிற்கு வந்த அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் மாறான ட்ரம்பின் அணுகுமுறை. அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் புதிய சுவர்களைக் கட்டுவதற்கான அனைத்து நிதிகளையும் நிறுத்துவதாக பைடன் கூறியுள்ளார்.
வெளியுறவுக் கொள்கையும் தேசீயப் பாதுகாப்பும்
அமெரிக்க துருப்புக்களின் விமான சுமைகளுக்குப் பதிலாக அமெரிக்க சிறப்புப் படைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களுடன் வெளி நாடுகளில் தீவிரவாத போராளிகளை எதிர்த்துப் போராடும் ஒரு மூலோபாயத்தை பைடன் ஆதரிக்கிறார். குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள தடுப்புக் காவல் நிலையத்தை அமெரிக்க மூடுவதைப் பார்க்க அவர் விரும்புகிறார். ஈராக் மீதான 2003 படையெடுப்பு உட்பட சில அமெரிக்க ராணுவத் தலையீடுகளை அவர் ஆதரித்தார். இப்போது அது ஒரு தவறு என்று கூறுகிறார். ஆனால் அவர் இராஜ தந்திரத்தைச் சார்ந்து கூட்டணிகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் மூலம் தீர்வுகளை அடைய முயலுகிறார்.
அவர் நேட்டோவின் வலுவான ஒரு ஆதரவாளர். நேட்டோவை பலவீனப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிளவுபடுத்தவும், அமெரிக்க தேர்தல் முறையை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்த முயற்சிப்பதன் மூலமும் மேற்க்கத்திய ஜனநாயகத்தின் அஸ்திபாரத்திலிருந்து மாஸ்கோ விலகிச் செல்கிறது என்று அவர் எச்சரிக்கிறார். ரஷ்யா மேற்கத்திய நிதி நிறுவனங்கள் மூலமாக பில்லியன் கணக்கான டாலர்களைத் தகாதவிதத்தில் பயன்படுத்தி அரசியல்வாதிகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஆசிய-பசிபிக் கடற்படையின் இருப்பை அதிகரிக்கவும், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவுடனான கூட்டணிகளை வலுப்படுத்தவும் பைடன் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவர் ட்ரம்புடன் இணைகிறார். ஆனால் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு அமெரிக்க ஒரு சிறிய படையை வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் போன்ற இருதரப்பு மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுவதற்கான ட்ரம்ப்பின் முடிவுகள் மற்ற நாடுகள் வாஷிங்டனின் வார்த்தையை சந்தேகிக்க வழிவகுத்தன என்று அவர் கூறுகிறார். ஊழலை எதிர்த்துப் போராடுவது, சர்வாதிகாரத்தைத் தடுப்பது மற்றும் மனித உரிமைகளை ஆதரிப்பது போன்றவற்றைக் குறித்து விவாதிக்க அனைத்து ஜனநாயக நாடுகளையும் ஒரு உச்சிமாநாட்டிற்கு அழைக்க பைடன் விரும்புகிறார்.
இஸ்ரேலுக்கு “இரும்புக் கவச“ ஆதரவைக் கூறும் பைடன், இணைப்பைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான நீண்ட மோதலில் இரு மாநிலத் தீர்வுக்கு ஆதரவு அளித்துள்ளார். ட்ரம்ப் அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமிற்கு நகர்த்திய பின்னர் அதை அங்கேயே வைத்திருப்பேன் என்று கூறுகிறார்.