தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதுமுள்ள ஊர் தலைவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாடினார். அவர்களில் மூன்று பெண் ஊர் தலைவர்கள் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் சிறப்பான வேலைகளைச் செய்பவர்கள்.
கிராமங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதையும் இவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மூன்று பெண் தலைவர்களின் செயல்களால் ஈர்க்கப்பட்ட பிரதமர் மோடி, இந்த மாதிரியான தலைவர்கள்தான் நாட்டிற்கு தற்போது தேவை என்றார். இந்த மூன்று பெண்கள் தங்கள் பணிகள் குறித்தும் தங்கள் கருத்துக்களையும் பிரதமருடன் பகிர்ந்துகொண்டனர்.
பிரியங்கா தாஸ் மதங்கர்
மகாராஷ்டிரா மாநில புனே அருகேயுள்ள மேடகர்வாடி என்ற ஊரின் தலைவராக இருக்கும் பிரியங்கா தாஸ் மதங்கர், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரண்டாம் நாளே கிராமத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்தார். வைரஸ் மற்றும் பாக்டீரியா பரவலைக் கட்டுப்படுத்த கிராமம் முழுவதும் ‘சோடியம் ஹைப்போகுளோரைட்’ திரவம் தெளிக்கப்பட்டது.
ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் சில பெண் தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாஸ்க்குகள் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மாஸ்க்குகள் மேடகர்வாடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கிராமத்தில் தனிமைப்படுத்தும் ஒரு இடத்தையும் அவர் அமைத்தார்.
கிராமத்தில் தகுந்த இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். கிராமத்திலுள்ள ரேஷன் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்கப்பட்டன.
வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவர்களுக்குத் தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அத்தியாவசிய பொருள்கள் சென்று சேர்வதை உறுதி செய்தார். இது தவிர, இந்த நெருக்கடியான நேரத்தில் கிராமத்திலுள்ள பெண்களுக்கு நாப்கின்களை ப்ரியங்கா வழங்கினார்.
ப்ரியங்காவின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் பொருள்களுக்குத் தேசிய வேளாண் சந்தையில் (e-NAAM) குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதையும் உறுதி செய்யும்படி கூறினார்.
வர்ஷா சிங்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் ஊரடங்கை மிகச் சிறப்பாக அமல்படுத்திய வெகு சில கிராமங்களில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நக்தி டீ புஜுர்க் கிராமமும் ஒன்று. ஊரடங்கை முறையாக அமல்படுத்த ஒரு சிறப்புத் திட்டத்தையும் அவர் வகுத்தார்.