பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதும், வீட்டில் களேபரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடுமுறையை தங்களுக்கு விருப்பமான விளையாட்டை விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நண்பர்களுடன் விளையாடி உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதும் எந்த ஒரு விளையாட்டையும் விளையாட்டாகவே பார்க்கின்றனர். அதற்குள் இருக்கும் ஆபத்தை கண்டு கொள்ளாமல் கடந்து வருகின்றனர். அப்படியான ஒன்று தான் 'ஸ்கேட்டிங்' விளையாட்டு. குழந்தைகள் மிகவும் விரும்பி விளையாடக்கூடிய ஒன்றில் இதுவும் இடம் பெற்றுள்ளது. பொதுவாக இந்த விளையாட்டை 4 முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் தான் அதிகம் விளையாடுகின்றனர்.
ஸ்கேட்டிங் விளையாடும் போது குழந்தைகள் ஹெல்மெட் அணிவது அவசியம், கட்டாயமும் கூட. இதனுடைய முக்கியத்துவத்தை பெற்றோர்கள் குழந்தைகளிடம் அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் ஹெல்மெட் அணிவதை விரும்புவதில்லை, காரணம் அதை அணிவதால் சுலபமாக விளையாட முடியாது என்பது அவர்களுடைய எண்ணம். அதுமட்டுமல்லாமல் விளையாட்டின்போது மெதுவாக சென்று தன்னைத் தானே நிலையாக வைத்து கொண்டு, கால்களையும் நிலையாக வைத்துக் கொண்டு நிறுத்த வேண்டும். ஆனால் சில குழந்தைகள் விளையாடும் இடத்தில் போடப்பட்டிருக்கும் எல்லைக் கோடு வரை வேகமாகச் சென்று கையை அசைத்து நிறுத்துகின்றனர். அது திறமையானது தான், ஆனால் ஆபத்தானதும் கூட...