நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் ஒரு மருத்துவ குணம் உள்ளது. உதாரணமாக கோடைகாலத்தில் ஏற்படும் களைப்பை விரட்ட பானகத்தை அதிகம் குடிப்பார்கள். இதனால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் ஏற்படும் தெரியுமா? பழரசத்தை விட வெயிலுக்கு உகந்தது பானகம்தான்.
கால்சியம்+இரும்புச்சத்து +விட்டமின்கள் + எனர்ஜி = பானரகம்.
வெயிலுக்கு பானகம் அருந்தும்போது உடனடி சக்தி நமது உடலுக்குக் கிடைக்கிறது. நடைபயணம் போகும்போதும் களைப்பாக வீடு வந்தடையும்போதும் நாம் அருந்தும்பானகமானது உடலுக்குத் தேவையான சக்தியைத் தரம்.
கால்சியத்தை சுக்கிலிருந்தும்,இரும்புச்சத்து, அமினோஅமிலங்களை பனைவெல்லத்திலிருந்தும்,உணவுக் குழலில் ஏற்படும் தொற்றுகள், செரிமானத்தை சரி செய்ய ஏலக்காயும், எலுமிச்சை பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் நிலைத்தன்மையை உருவாக்குவதும், அதைப்பற்றித் தரவுகளும் நம் அனைவருக்கும் தெரிந்ததே.
புளியிலிருக்கும் வைட்டமின் 'சி'யானது பனைவெல்லத்துடன் வினைபுரிந்து உடனடி எனர்ஜியை உடலுக்கு அளிக்கிறது. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது மரபைப் போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம்.