ஹைதராபாத்: வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த அந்நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்கள், புதுப்பிப்புகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் குரூப்-அட்மின்களுக்கு முக்கியமான புதிய வசதி வழங்கப்பட உள்ளதாக, அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ட்வீட்டில் "வாட்ஸ்அப் குழு அட்மினாக இருப்பவர், அந்தக் குழுக்களில் பகிரப்படும் எந்த செய்தியையும் நீக்க முடியும். இதற்கு யாருடை அனுமதியும் தேவையில்லை. இந்த வசதியால் குழுக்களில் தேவையில்லாமல் பகிரப்படும், அநாகரீக செய்திகள், ஆபாச செய்திகளை எளிதில் நீக்கிவிடலாம்.