தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு, பயனடையும் சாம்சங் நிறுவனம்! - சாம்சங் ஸ்மார்ட்போன்

இந்திய சீன ராணுவங்களுக்கு இடையேயான மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு உணர்வால் சாம்சங் நிறுவனம் அதிகம் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung
Samsung

By

Published : Jun 23, 2020, 7:59 PM IST

இந்தியா - சீனா ராணுவங்களுக்கிடையே லடாக் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலையும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவன தயாரிப்பைகளை புறக்கணிக்க வேண்டும் என்று குரல் அதிகரித்து வருகிறது. சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை இருப்பதால் சீன நிறுவனங்களை புறக்கணிப்பது சாத்தியமில்லை என்ற குரலும் மற்றொரு புறம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து கவுன்டர்பாயின்ட் நிறுவனத்தின் சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் மூத்த ஆய்வாளராக உள்ள பிரச்சீர் சிங் கூறுகையில், "இந்திய ஸ்மார்ட்போன் துறையில், சீன நிறுவனங்களின் ஊடுருவலும் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. மிகச் சில நிறுவனங்களால் மட்டுமே இதனை உடைக்க முடியும்.

வாடிக்கையாளர்களுக்கும் தேர்வு செய்வதற்காக அதிக நிறுவனங்கள் இருப்பதில்லை. உதாரணமாக, பட்ஜெட் பிரிவில் சீன நிறுவனங்களாக சியோமி, ரியல்மி ஆகியவற்றில் இருந்துதான் ஸ்மார்ட்போன் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். அதைவிட கொஞ்சம் விலை அதிகமான பிரிவில் மற்ற சீன நிறுவனங்களான ஓப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

இந்திய சந்தையில் விலை என்பது மிக மிக முக்கியம். எனவே, புதிய நிறுவனங்கள் சீன நிறுவனங்கள் அளிக்கும் விலைக்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வது என்பது நடக்காத காரியம். இந்தச் சூழ்நிலையில், சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு உணர்வால் சாம்சங் நிறுவனம் அதிக பயனடைய வாய்ப்பு உள்ளது.

மேலும், கிட்டதட்ட 99 விழுக்காடு ஸ்மார்ட்போன்கள், சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களாகவே இருந்தாலும், இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்திய ஜிடிபியிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, சீன ஸ்மார்ட்போன்களை புறக்கணிக்க வேண்டுமா, கூடாதா என்பதை ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனிப்பட்ட முறையில் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? - இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details