தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2019, 6:50 PM IST

ETV Bharat / lifestyle

அடுத்த லெவலுக்குப் பாய்ந்த சியோமி மொபைல்கள்!

latest news on xiaomi:சியோமி நிறுவனம் அடுத்த ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட 5G ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

Xiaomi

இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான சியோமி அடுத்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட 5G ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சியோமி தலைவர் லீ ஜுன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் சர்வதேச இணையக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர், "5G மொபைல் ஃபோன் மாடலான Xiaomi Mi 9 Pro 5G-க்கு சர்வதேச அளவில் நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசியவர், "வரும் ஆண்டுகளில் 4G ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை வெகுவாக குறையும் என்பதால் டெலிகாம் நிறுவனங்களும் தங்களது 5G தொழில்நுட்ப விரிவாக்கத்தை வேகப்படுத்த வேண்டும்" என்றும் கூறினார்.

வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பம் காரணமாக ப்ரீமியம் (ரூ. 30 ஆயிரத்துக்கு மேல்) செக்மென்டுக்கு மட்டுமில்லாமல் மிட்ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் செக்மென்டுகளிலும் 5G தொழில்நுட்பத்துடன் கூடிய 10க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் ஃபோன் மாடல்களை வெளியிட சியோமி திட்டமிட்டுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள Redmi K30 ஸ்மார்ட் ஃபோன் 5G தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கூகுளின் அடுத்த மொபைல்போன் இந்தியாவுக்கு வராது!

ABOUT THE AUTHOR

...view details