'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 11 மாடல்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், "மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய நிகழ்வு! ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 மாடல்களை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஐபோன் 11 ஸ்மார்ட்போன்கள் கடைகளை வந்தடைந்ததாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்கூட்டியே ஐபோன் 11 உற்பத்தி இந்தியாவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஊரடங்கால் அது தாமதமானதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு 22 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. தற்போது, ஐபோன் 11 இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால் இந்த வரியிலிருந்து அதற்கு பொருந்தாதது. இருப்பினும், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் ஐபோன்களுக்கு எவ்வித விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை.