தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 28, 2020, 8:27 PM IST

ETV Bharat / lifestyle

கரோனா - சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரிப்பு!

லண்டன்: கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.

WhatsApp
WhatsApp

கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாக பரவிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

இந்த காலங்களில் மக்கள் தங்களது பெரும்பாலான நேரங்களை சமூக வலைதளங்களிலேயே கழிப்பது இங்கிலந்தைச் சேர்ந்த காந்தர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காந்தர் நிறுவனம் நடத்திய ஆய்வில், வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நாடுகளில் ஆரம்பகாலத்தில் 27 விழுக்காடும் பின்னர் 41 விழுக்காடும் இறுதி நாள்களில் 51 விழுக்காடும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் 76 விழுக்காடு வரை வாட்ஸ்-ஆப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அதேபோல, சீனாவிலும் 58 விழுக்காடு வரை அந்நாட்டின் சமூக வலைதளங்களான வீசாட் மற்றும் வெய்போவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல உலகெங்கும் ஃபேஸ்புக்கின் பயன்பாடும் 36 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

மேலும், இந்த ஆய்வில் நம்பத்தகுந்த தகவல்களை 52 விழுக்காடு வரை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மூலம் பெறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வ தளங்களைவிட பெரும்பாலும் செய்தித்தாள்களையும் தொலைக்காட்சிகளையும் மக்கள் நம்புவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, இணைய பிரவுசிங் 70 விழுக்காடும் தொலைக்காட்சி பயன்பாடு 63 விழுக்காடும் சமூக வலைதளங்களின் பயன்பாடு 61 விழுக்காடும் ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 35 வயதுக்கு கீழானவர்களின் சமூக வலைதள பயன்பாடு 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5 நிமிடங்களில் கரோனா சோதனை - அசத்தும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details