தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

பொதுமக்களுக்கு அரசு விடுத்துள்ள புதிய சேலன்ஞ்! - ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் நேரத்தைக் கழிக்கும் வகையில், புதிய சேலன்ஞ் ஒன்று My Govt தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Lockdown: Take the challenges by #MyGovIndia
Lockdown: Take the challenges by #MyGovIndia

By

Published : Apr 13, 2020, 12:34 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பொதுமக்களும் தொலைக்காட்சி பார்ப்பது, ஸ்மார்ட்போன்களில் கேம்களை விளையாடுவது என்று தங்கள் நேரத்தைக் கழிக்கின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் தளமான My Govtஇல் புதிதாக ”Khushiyan Phailaon, Virus Nahi” என்ற புதிய சேலன்ஞ் வெளியிடப்பட்டுள்ளது.

Khushiyan Phailaon, Virus Nahi சேலன்ஞை எப்படி செய்வது?

  • உங்கள் அன்பான செயலின் மூலம் அருகிலுள்ளவர்களின் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வாருங்கள்.
  • அதை #MyGovIndia என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுங்கள்
  • உங்கள் நண்பர்களிடம் இதைச் சாலாக பகிர்ந்து கொள்ளுங்கள்

ஊரடங்குக் காலத்தில் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய சேலன்ஞ், இணையவாசிகள் மத்தியில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:நாட்டின் தொழில் துறை உற்பத்தி உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details