தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கரோனா ஊரடங்கில் லட்ச கணக்கில் பிரியாணிகளை தின்று முழுங்கிய இந்தியர்கள்! - online food order

கரோனா ஊரடங்கின்போது வீட்டில் முடங்கிய இந்தியர்கள் ஸ்விகி மூலம் 5.5 லட்சம் பிரியாணிகளை பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், ஒரு லட்சத்து 20ஆயிரம் பிறந்தநாள் கேக்குளை பதிவுசெய்து பெற்றுள்ளதாகவும் ஸ்விகி தெரிவித்துள்ளது.

ஸ்விகி
ஸ்விகி

By

Published : Jul 24, 2020, 6:40 PM IST

டெல்லி: நாடு தழுவிய கரோனா ஊரடங்கு சமயத்தில் 5.5 லட்சம் பிரியாணிகளை பயனர்கள் பதிவுசெய்து பெற்றுள்ளதாக ஸ்விகி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 32.3 கோடி கிலோ அளவுள்ள வெங்காயத்தையும் 5.6 கோடி கிலோ அளவின் வாழைப்பழங்களையும் பயனர்கள் ஸ்விகி செயலி மூலமாக பதிவுசெய்து பெற்றுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தினசரி குறைந்தது 65 ஆயிரம் இரவு உணவுக்கான பதிவுகள் சரியாக இரவு 8 மணிக்கு செய்யப்பட்டது என்றும் தனது அறிக்கையில் ஸ்விகி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜியோமார்ட் செயலி: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் தரவிறக்கம் செய்யலாம்!

ஒரு லட்சத்து 29ஆயிரம் சாக்கோ லாவா கேக்குகளையும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பிறந்தநாள் கேக்குகளையும் ஸ்விகி பயனர்களின் வீடுகளில் கொண்டு சேர்ந்த்துள்ளது.

இதுமட்டுமில்லாமல்,

  • 73 ஆயிரம் கிருமி நாசினி குப்பிகள்,
  • 47ஆயிரம் முகக் கவசங்கள்,
  • 3 லட்சத்து 50ஆயிரம் நூடுல்ஸ் பொட்டலங்கள்

ஆகியவற்றின் பதிவையும் ஸ்விகி பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details