மக்களின் வழிகாட்டியாகத் திகழும் கூகுள் மேப் செயலி, திக்குதெரியாத காட்டிற்கு நாம் போனாலும், சரியான இடத்திற்கு நம்மைப் பத்திரமாக கொண்டுபோய் சேர்த்துவிடும். இச்செயலி, பயனர்களின் தேவையை உணர்ந்து, அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கிவருகிறது.
அந்த வகையில், தற்போது உங்களின் தெருவைப் புகைப்படங்கள் மூலம் அச்சு அசலாக காட்டும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனர்கள் சாலையில் நடந்து செல்கையில் செல்போனில் படங்களைத் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். பின்னர், அவற்றை கூகுள் மேப் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.