திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அடுத்துள்ள ஆவிடைதேவன்குளத்தை சேர்ந்த நாகமுத்து - பக்கிரியம்மாள் தம்பதியரின் இளைய மகன் கனகரத்தினம் (21). இவர் மினி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இளைஞர் கனகரத்தினம் பெண் ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனகரத்தினம் வேலைக்கு செல்லாமல் அவர் பழகி வந்த பெண் ஒருவரிடம் கைப்பேசியில் அடிக்கடி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கனகரத்தினத்தின் பெற்றோர் அவரிடம் கேட்டதற்கும் சரியான பதில் கூறவில்லை.
இந்நிலையில் இன்று காலை முதல் மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர்.