தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு! - நெல்லை செய்திகள்

நெல்லை: கூடங்குளம் அருகே பெருமணல் கடலில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தேடுதல்
தேடுதல்

By

Published : Jun 1, 2020, 7:07 PM IST

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மகன் காட்வின். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் நேற்று (மே 31) மதியம் கடலில் குளிக்க சென்றுள்ளார். 5 பேரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அலையின் சீற்றம் அதிகமானதால் 5 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 4 பேர் கரை வந்து சேர்ந்தனர். காட்வின் மட்டும் கரைக்கு திரும்பவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த பெருமணல் இடிந்தகரை மீனவர்கள் படகில் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் காட்வினை கண்டுபிடிக்க முடியவில்லை.

மீனவர்கள் தேடுதல் வேட்டை
இந்நிலையில் கடலோர பாதுகாப்பு படையினரும் காவல் துறையினரும் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை காட்வின் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்பு காட்வினின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details