தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2020, 9:37 PM IST

ETV Bharat / jagte-raho

பஞ்சு மிட்டாய் விற்பனையாளரைத் தாக்கி பணம் பறித்த கும்பல்

திருப்பத்தூர்: ஆம்பூரைச் சேர்ந்த வடமாநிலத்தவரைத் தாக்கி பணம் பறித்துத் தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் அபுல்
ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் அபுல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அபுல் (24). இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தினமும் பஞ்சு மிட்டாய் விற்பதை தொழிலாக செய்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அபுலை, நடராஜபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே வழி மறித்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை சரமாரியாகத் தாக்கி சட்டைப் பையில் வைத்திருந்த ரூ. 3 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். காயங்களுடன் இருந்த அபுலை கண்ட அப்பகுதியினர், அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, அபுல் அளித்த புகாரின் அடிப்படையில், ஆம்பூர் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details