தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி உடல்

சென்னை: முத்தியால்பேட்டையில் உள்ள கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

By

Published : Sep 23, 2019, 8:26 PM IST


சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்துவந்த மாணவி கோமதி(19). இவரது சொந்த ஊர் கடலூர் என்பதால் கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் தங்கி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் நீண்ட நேரம் கோமதி பேசிவிட்டு அழுததாக கூறப்படுகிறது.

பின்னர் இரவு ஒரு மணியளவில் கோமதியின் அறையில் அவரது நண்பர்கள் சென்று பார்த்தபோது தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் கோமதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கணவன் விவசாயம் செய்ததை அவமானமாகக் கருதிய பெண் தற்கொலை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details