தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2020, 11:43 AM IST

ETV Bharat / jagte-raho

கணவரை கொல்ல முயன்ற மனைவி, நண்பருடன் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கணவரை கொல்ல முயன்ற மனைவி மற்றும் அவரது நண்பரை காவல் துறையினர் கைது செய்தனர்.

affair
affair

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த பலப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (40). ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி வானதி(32). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழு ஒன்றில் உறுப்பினராக இருக்கும் வானதி, அவ்வப்போது, மரிமானிக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (29) என்பவரது டிராவல்ஸில் ஆலங்காயத்திற்கு வந்து சென்றுள்ளார்.

இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இந்தப்பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் வானதியின் கணவர் விநாயகமூர்த்தி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனால், வானதியும், ஜெயக்குமாரும் சந்திக்க முடியாமல் செல்போனில் பேசி வந்தனர்.

மனைவி யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசுவதை பார்த்த விநாயகமூர்த்தி யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதுகுறித்து வானதி, தனது நண்பர் ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து விநாயகமூர்த்தியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த 5ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயக்குமாரை வீட்டிற்கு வரவழைத்த வானதி, அவருடன் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவர் விநாயகமூர்த்தியின் முகத்தில் தலையணையை அழுத்தி கொலை செய்ய முயற்சித்தனர். இதில், மூச்சு விட முடியாமல் திணறிய விநாயகமூர்த்தி தப்பிக்கும் முயற்சியில் ஜெயக்குமாரின் கையை கடித்து காயப்படுத்தினார். பலத்த காயமடைந்த ஜெயக்குமார் தப்பியோடினார். சத்தம் கேட்டு வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர் மூச்சு விட முடியாமல் திணறிய விநாயகமூர்த்தியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து விநாயகமூர்த்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆலங்காயம் காவல் துறையினர், வானதியிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை சாமர்த்தியமாக பேசி வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இருவரும் விநாயகமூர்த்தியை கொலை செய்ய முயற்சித்ததை ஒப்புக்கொண்டனர்.

பின்னர் இவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, வானதி, ஜெயக்குமார் இருவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:2020 பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: சாதனை படைக்கும் கருத்துக்கணிப்பு

ABOUT THE AUTHOR

...view details