திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் ரமேஷ்குமார் (34), ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி தாமலேரிமுத்தூரில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரமேஷ்குமார் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி நித்யா கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். அப்போது, ரமேஷ்குமாரின் மனைவி நித்யாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர், நித்யாவை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மதுபழக்கத்துக்கு ஆளான ரமேஷ்குமார், குடும்பச் செலவுக்கு பணம் கொடுக்காமலும், நித்யாவின் சகோதரர் அரவிந்தனின் (30), மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.