தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

காட்பாடி ரயில் நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் - பொறியியல் பட்டதாரிகள் கைது

வேலூர்: ரயில் நிலையத்தில் சுமார் 35 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் சுமார் 35 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்

By

Published : Sep 17, 2019, 1:04 PM IST

Updated : Sep 17, 2019, 3:52 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் வழக்கமான சோதனையில் ரயில்வே காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிக்கிம் மாநிலத்திலிருந்து வரும் தின்சுகியா விரைவு ரயிலில் வந்த மூன்று பேர் சந்தேகத்துக்கிடமாக காணப்பட்டனர்.

காட்பாடி ரயில்வே காவல் துறையினர் அவர்களை விசாரித்ததில் உரிய வரி செலுத்தாமல், உரிய அனுமதி இன்றி வெளிநாட்டு சிகரெட்களை சிக்கிம் மாநிலத்திலிருந்து சென்னைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் விசாரணையில் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் மூன்று பேரும் இறங்குவதற்கு பதிலாக காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கியபோது காவல் துறையினரிடம் சிக்கியதாகவும், அந்த மூன்று பேரும் சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான கார்த்திகேயன் (34), பாலமுருகன் (28), சுப்பிரமணியன் (26) என்பதும் தெரியவந்தது.

வேலூர் ரயில் நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களை காட்பாடி ரயில்வே காவல் துறையினர் மாவட்ட வணிக வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து காட்பாடி காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Last Updated : Sep 17, 2019, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details