தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

முகக்கவசம் அணிய சொன்ன பெண் அதிகாரியை அறைந்த விசிக நிர்வாகி கைது! - மாநகராட்சி அதிகாரி மீது தாக்குதல்

சென்னை: முகக்கவசம் அணிய சொல்லியதால் மாநகராட்சி பெண் அதிகாரியை ஆபாசமாக பேசி, கன்னத்தில் அறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

arrest
arrest

By

Published : Nov 4, 2020, 3:05 PM IST

புதுப்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றுபவர் காட்லின் வெல்வா (33). இவர் நேற்று எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வாகன ஓட்டுநரான துரைக்கண்ணு வாகன பராமரிப்பு தொடர்பாக தன்னிடம் நீண்ட நாளாக பிரச்சனை செய்து வந்ததால் வேலையை விட்டு போகச்சொல்லியும், தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொழிற்சங்க செயலாளராக இருப்பதாகக் கூறி, தன்னை மிரட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று காலை அலுவலகத்திற்கு செல்ல வாகனத்தை இயக்கும் போது, முகக்கவசம் அணியக் கூறியதால் தன்னிடம் தகராறு செய்ததுடன், பின்னர் தனது கட்சியை சேர்ந்த வெங்கடேஷ், செல்வா உட்பட 5 பேரை அழைத்து வந்து ஆபாசமாக பேசியும், கன்னத்தில் அறைந்து தாக்கியதாக புகாரில் காட்லின் வெல்வா குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த எழும்பூர் காவல்துறையினர் விசிக நிர்வாகி துரைக்கண்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரோடு சேர்ந்து காட்லின் வெல்வாவிடம் பிரச்சனையில் ஈடுபட்ட மற்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி மற்றும் குழந்தை சடலங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட கணவர்!

ABOUT THE AUTHOR

...view details