உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டம் மஜிலா எல்லைக்குட்பட்ட திகியா கிராமத்தில் வசித்துவரும் 17 வயது சிறுமியின் குடும்பத்திற்கும், அண்டை வீட்டாருக்கும் இடையே முன்பகை இருந்துவந்துள்ளது. இதனால் இரு வீட்டிற்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (அக். 24) முன்பகை முற்றவே இரு வீட்டாரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கியுள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த அண்டை வீட்டைச் சேர்ந்தவர் சிறுமியை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் சிறுமியின் கைகள் சிதைந்துள்ளன.