தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2020, 5:51 PM IST

ETV Bharat / jagte-raho

விழுப்புரத்தில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த இருவரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

two-arrested
two-arrested

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்கிராய், ஆனந்த். இவர்கள் இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்ககளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

இவர்கள் மீது கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணனின் பரிந்துரைசெய்தார். அதனை ஏற்று குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உத்தரவிட்டார்.

அதன் பேரில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் இரண்டு குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

இதையும் படிங்க :கோபியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய ஐவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details