தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

போக்குவரத்து காவலர் மீது வாகனத்தை மோதிய இருவர் கைது! - கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: குடிபோதையில் இருசக்கர வாகனத்தை போக்குவரத்து ஆய்வாளர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Two arrested for driving crashes into traffic guard
Two arrested for driving crashes into traffic guard

By

Published : Jun 23, 2020, 4:20 AM IST

சென்னையில் முழு ஊரடங்கினால், தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களை பிடிக்க காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இன்று மாலை கெல்லீஸ் ஜங்ஷனில் ஐ.சி.எப் போக்குவரத்து ஆய்வாளர் குமரன்( 55) தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது அந்த வழியே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு இளைஞர்களை ஆய்வாளர் குமரன் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தாமல் ஆய்வாளர் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இதையடுத்து அவர்களைப் பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் கொளத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் விஜய் (23) மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த அன்பு ( 20) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரையும் அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு கவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடியுள்ளதால், அந்த இளைஞர்களுக்கு மதுபானம் கிடைத்தது எங்கே என விசாரணை நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details