சென்னையில் முழு ஊரடங்கினால், தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களை பிடிக்க காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இன்று மாலை கெல்லீஸ் ஜங்ஷனில் ஐ.சி.எப் போக்குவரத்து ஆய்வாளர் குமரன்( 55) தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது அந்த வழியே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு இளைஞர்களை ஆய்வாளர் குமரன் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தாமல் ஆய்வாளர் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.