திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் மிகுமின் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியில் காசாளர் வைத்துவிட்டு சென்ற ஒரு கோடி 47 லட்ச ரூபாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது.
திருச்சி கூட்டுறவு வங்கி கொள்ளை: சிசிடிவி காட்சி! - Trichy co-operative bank theft, cctv footage
திருச்சி: திருவெறும்பூர் கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளைக்கான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருச்சி கூட்டறவு வங்கி கொள்ளை: பிரத்யேக சிசிடிவி காட்சி!
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் திவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வங்கிக் கொள்ளை நடந்த சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
திருச்சி கூட்டறவு வங்கி கொள்ளை: பிரத்யேக சிசிடிவி காட்சி!
அந்த சிசிடிவி காட்சியில் கொள்ளையர் ஒருவர் மட்டுமே இச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் முகமூடி அணிந்துகொண்டு, அங்க அடையாளங்கள் ஏதும் தெரியாத அளவுக்கு ஜெர்கின் அணிந்து இச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.