தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ரவுடி ரஜினி கொலையில் முக்கிய திருப்பம்... குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்! - rowdy anpu rajini murder accused

புதுச்சேரி: வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், எப்படி கொலை செய்தோம் என்பது தொடர்பான பரபரப்பு தகவல்களை குற்றவாளிகள் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

The main twist in Rowdy Anpu Rajini's murder

By

Published : Nov 12, 2019, 9:36 PM IST

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி அன்பு ரஜினி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் அன்பு ரஜினி தனது காரில் முத்தியால்பேட்டை பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி அவரைப் படுகொலை செய்து தலைமறைவாகினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடிவந்தனர்.

இதையடுத்து கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான ஸ்ரீராம், அவரது கூட்டாளிகளான நிவாஸ், ஜெரோம், சூர்யா உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் கருவடிக்குப்பத்தில் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கத்தி, இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

அன்பு ரஜினி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள்

அவர்களிடம் காவல் துறையினர் விசாரித்ததில், புதுச்சேரி சிறையில் உள்ள சோழனின் கூட்டாளியான வினோத்தை கொலை செய்த குற்றவாளிகளை தற்போது கொலையான அன்பு ரஜினி ஜாமின் எடுக்க உதவியதாகவும், இதனால் பழிக்குப் பழி வாங்க சிறையிலுள்ள சோழனின் தூண்டுதலின்பேரில் அன்பு ரஜினியை கொலை செய்ததாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா: அடித்துக் கொலை செய்த மருமகன்!

ABOUT THE AUTHOR

...view details